Sunday 8 April 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #4



36. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


ல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..


37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?


மிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ்வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது வேலைக்கு போறதுதான்  நல்லது.


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால்
பகிருங்களேன் ?    by @iyyanars

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனதுதான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..
ந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பிவிட்டார்..
அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது
1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது,
2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது.


39. .உங்கள் இளமையின் ரகசியம் ?

னக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... (கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க)
தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ) வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன். சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை..
இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10, மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by @arivukkarasu

ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹிஹி

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி, புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்..


42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?

நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு பண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக விமர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்..

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்.

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்..

45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா? by @NattAnu

ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான்...!!!!!
.
.
.


(பதிவரின் பேட்டி இத்துடன் முடிகிறது.
அடுத்தொரு பதிவருடன் மறுபடி சந்திப்போம்.!!!)

.
.
.

Saturday 25 February 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #3





26.   நீங்க இது வரை விட வேண்டும் என்று நினைத்து விட முடியாத கெட்ட பழக்கம் எது? (ஒண்ணு சொல்லுங்க போதும்) - சுதா, பெங்களூர்

னக்கு என்னவோ 75 கெட்ட பழக்கம் இருக்கற மாதிரியும், அதுல ஏதோ ஒண்ணு சொல்லுங்கன்னு கேட்கற மாதிரியும் இருக்கே? உலகத்துக்கே தெரியும் எனக்கு சிகரெட், தண்ணி (சரக்கு), காஃபி, டீ, அசைவம் என எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு.. என் கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கமா அம்மா, அப்பா சொல்றது சினிமா ஒண்ணு விடாம பார்க்கும் ஆளா இருக்கான்கறதுதான்.. அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும், அது எனக்கு சினிமாவா இருந்துட்டு போகுது.. இப்போ என்ன..?


27.  நாளுக்கு இரண்டு பதிவு வீதம் பதிவு போடுறீங்களே, உங்கள் பதிவை நீங்கள் திரும்ப படிச்சு பார்க்க நேரம் இருக்கா?

நான் போக்கிரி விஜய் மாதிரி, ஒரு தடவை போஸ்ட் போட்டுட்டா என் போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன்.. ( ஏன்னா ஆல்ரெடி 3 தடவை படிச்சு பார்த்துட்டு, மிஸ்டேக் எல்லாம் கரெக்ட் பண்ணிட்டுதானே  பப்ளீஷ் பண்றேன்?)


28. டிவிட்டில் சிலசமயம் சிலரை அளவுக்கு அதிகமா கிண்டல் செய்து அவங்க பீல் செய்தா காணமல் போயிடுறீங்க? உங்க ஆக்சுவல் ரியாக்சன் என்ன?

னக்கு கிடைக்கற நேரம் ரொம்ப கொஞ்சம்.. கேப் கிடைச்சா 5 ட்வீட் போட்டுட்டு போயிடுவேன்.. அந்த கேப்ல என்னை காணாதவங்க கிசு கிசு பரப்புவாங்க.. பிரச்சனைன்னா ஓடிடறான்.. ஆண்கள் கேள்வி கேட்டா பதில் சொல்றதில்லைன்னு.. இவங்களா கிளப்பி விடறதுதான்.. ஆனா சில சமயம் குறிப்பிட்ட பெண் பதிவர்களை நகைச்சுவையா கிண்டல் செய்யறப்ப அது ஓவர் டோஸ் ஆகி அவங்க மனம் வருத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு, என் மேல் தப்பு இருந்தா டைம் லைனில், டி.எம்.மில் மன்னிப்பு கேட்க தயங்கியதில்லை..!!


29. சில கீச்சர்கள் பற்றி கற்பனை பதிவு போட்டீங்களே,கொஞ்சம் வரம்பு மீறியதா தோணலையா?  -by @jroldmonk

மா, கோவை, சிங்கப்பூர் ட்வீட்டர்களை பற்றி தலா ஒரு பதிவு போட்டேன்.. 2ம் காமெடிக்காகத்தான்.. ஆனால் அதில் ஒரு பதிவு தங்கள் குடும்பத்தை மனம் வருத்தம் செய்ய வைத்து விட்டது என்று அந்த ட்விட்டர் சொன்னதும் அந்த பதிவை அகற்றி விட்டேன்..!!


30.  புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு தங்களின் அட்வைஸ்? :- By @Prabhu_B

நிறைய படியுங்க.. நீங்க ஒரு போஸ்ட் போடனும்னா 10 போஸ்ட் படிச்சிருக்கனும்.. நீங்க 10 பேர்க்கு போய் படிச்சு கமெண்ட் போட்டு, ஓட்டு போட்டுட்டு வந்தாத்தான் அதுல பாதிப்பேராவது உங்க பதிவுக்கு வருவாங்க.. அதாவது நீங்க உங்க வீட்டு விஷேஷத்துக்கு மொய் வரனும்னு நினைச்சா ஆல்ரெடி நீங்க மொய் வெச்சிருக்கனும்.. எழுதுவது எல்லாருக்கும் உபயோகமாக இருக்கனும், மனம் களிக்கும்படி இருக்கனும், மற்றவங்க முகம் சுளிக்கும்படி இருக்கக்கூடாது.!


31. இந்த தீராத கலைதாகம்(!) உங்களுக்கு எப்டி,எப்பருந்து வந்துச்சு...? உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?  by @siva_says

நான் எப்பவும் வெய்யில்லயே சுத்திட்டு இருப்பேன், ஏன்னா என் வேலை அப்படி.! வெளீல அலையற வேலை.. அதனால வீட்டுக்கு வந்ததும் செம தாகம் எடுக்கும். கொஞ்சம் தண்ணீர் குடிச்சுட்டு போஸ்ட் போட ரெடி ஆகிடுவேன்.!!!  ( ஏய்யா கேள்விக்கு இடைல ஆச்சரியக்குறி போட்டுட்டா கலாய்க்கறதா ஆகிடுமா?)

னக்கு இன்ஸ்பிரேஷன் சேட்டைக்காரன், குசும்பன், பன்னிக்குட்டி ராம்சாமி, சிரிப்புப்போலீஸ் உட்பட நகைச்சுவையா யார் எல்லாம் எழுதறாங்களோ அவங்க எல்லாம்.. ( இப்போ லேட்டஸ்ட் ஹிட்டர் கட்டதுர கூட எனக்கு இன்ஸ்பிரெஷன் தான்.. )


32.  உங்களை ஃபிகர் என்று அழைக்கலாமா??    By @RealBeenu

ரு ஃபிகரே என்னை ஃபிகர் என்று அழைக்குதே அடடே..!!

"ஹலோ.. பொதுவா பொண்ணுங்க  திட்டுனாலே நாங்க சிரிப்போம், பாராட்டுனா கேட்கவா வேணூம்.. நீங்க என்னை செம கட்டை, சூப்பர் ஃபிகர் இப்படி எப்படி கூப்பிட்டாலும் கோபமே பட மாட்டேன்.. ஏன்னா நாங்க நல்லவங்கங்க ங்க..!!!!".


33. மென்ஷன்களுக்கு இப்போதெல்லாம்  பதில் போடுவதில்லை ஏன்? சிலரிடம் மட்டும் பேசுகிறீர் அது ஏன்? காரணம் ?   By @soniaarun

மென்ஷன் பார்க்கவே கொஞ்ச நாளாத்தான் கத்துக்கிட்டு இருக்கேன்.. இனி முடிஞ்ச வரை போடறேன்.. எனக்கு டைம் ரொம்ப கம்மி.. இருக்கற கொஞ்ச நேரத்துல ட்வீட்ஸ் போடனும், பிளாக் போஸ்ட் போடனும், கமெண்ட்க்கு ரிப்ளை போடனும், மொய் வைக்கனும் (பிளாக்ல).

சிலர்ட்ட மட்டும் பேசறேன்னா - யார் நம்ம வேவ் லெங்க்த்க்கு செட் ஆகறாங்களோ அவங்க கூட பேசறேன்.. இப்போ உங்களை என்ன திட்டுனாலும் உங்களூக்கு கோபம் வராது.. கலாய்ச்ச்சாலும் ஜாலியா எடுத்துக்குவீங்க, சீரியஸ் ஆக மாட்டீங்கன்னா உங்க கிட்டே பேசுவேன்.. வீட்டை விட்டு வெளீல வர்றப்பவே சண்டைக்கு தயாரா வாளோட வந்தா..? ( வாள் பொண்ணை சொல்லலை.. ).

34. பிகர், கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?

கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன-னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகளை என் பிளாக்ல ட்வீட்ஸ்ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும், அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை.


35. டைம் லைனில் ஒருவர் போடும் த்வீட்டை வைத்தே பல ட்வீட் போடுகிறீரே அது எப்படி? ஏன் இப்படி எல்லாரையும் கலாய்க்கிறீங்க, அதுவும் மென்ஷன்  போடாமலேயே?

சொந்தமா சரக்கு இருக்கறவன் வந்தமா ட்வீட்ஸ் போட்டமா போனோமான்னு போயிடுவான், இல்லாதவன் மற்றவங்க போடற ட்வீட்ஸ்ல இருந்து ஒண்ணு புதுசா உருவாக்குவான் 'ரீமிக்ஸோ டெக்னாலஜி'னு அதுக்கு பேரு... ஹி ஹி..!!!

மென்ஷன் போட்டு கலாய்ச்சா சண்டை வந்துடும். பொதுவா சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டாலும் எஸ் ஆகிடலாம்.. நாங்க எல்லாம் அட்டாக் பண்றப்பவே ஓடறதுக்கு ரோடு எங்கே இருக்குன்னு பார்க்கற ஆளுங்க... ஹி ஹி..!!!!
.
.

Saturday 18 February 2012

விமர்சனத்தில் சொதப்புவது எப்படி.?





காதலில் சொதப்புவது எப்படி.?

திரை விமர்சனம்


*காதலில் சொதப்புவது எப்படி? என்ற 8 நிமிட குறும்படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்த  பாலாஜிமோகன் அதை 2 மணிநேர படமாக உருவாக்கி  அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்….

*அறிமுக இயக்குநர் பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள், சிறப்பான படைப்பைத்
தந்ததற்காக.!

*யூட்யூப் இணையத்தில் லட்சோபலட்சம் நபர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட படம் என்பதால் இயக்குநர் மீது எதிர்பார்ப்பு அதிகம். எதிர்பார்ப்பை பொய்யாக்காத இயக்குநருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

கதை:

*காதல் படங்களில் கதை என்ற  ஒன்றை எதிர்பார்க்கக் கூடாது.இதிலும் அப்படித்தான். இசிஇ படிக்கும் மாணவர் அருணாக சித்தார்த், கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி பார்வதியாக அமலாபால், இவர்களின் காதல் சொதப்பல்கள்தான் கதை.

*காதலியை சந்தித்தது, காதலில் சொதப்பியது, என அனைத்தையும் சித்தார்த்
ப்ளாஷ்பேக்காக சொல்கிறார்.  பிரிந்த காதலர்கள் எதனால் பிரிந்தார்கள், இறுதியில் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

*சித்தார்த், அமலாபால், காதலுக்கு நடுவே நண்பர்களின் காதல், பெற்றோர்களின் காதல் என அனைத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார்  பாலாஜிமோகன்.

ஒளிப்பதிவு:

*நீரவ்ஷா தன் கேமரா மூலம் இந்த படத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அமலாபாலின் தந்தை சுரேஷின் பஜாஜ் ஸ்கூட்டர், சித்தார்த், அமலாபாலின் மொபைல் போன் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட அழகாகக் காட்டுகிறது நீரவ்ஷாவின் கேமரா. ஸோ க்யூட் ஒளிப்பதிவு…!!!

இசை:

*தெலுங்குப் படங்களுக்கு மட்டுமல்ல தமிழ்ப் படங்களுக்கும் தன்னால் தரமான இசையைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தமன்.S.

*பின்னணி இசையும் சூப்பர். பார்வதி மற்றும் அழைப்பாயா,  தவறுகள் உணர்கிறோம், ஆனந்த ஜலதோஷம் என பாடல்கள் சூப்பர். வாழ்த்துக்கள் மதன்கார்க்கி.

ஹைலைட்ஸ்:

*சித்தார்த்-அமலாபால் கெமிஸ்ட்ரி.

*குறும்படத்தில் நண்பர்களாக நடித்தவர்களையே இதிலும் அதே ரோலில் நடிக்க
வைத்திருப்பது…

*சித்தார்த்தின் நண்பராக வரும் சிவா அசத்தியிருக்கிறார், இனி நிறைய
வாய்ப்புகள் தேடிவரும் அவரை…

*ஹீரோ, ஹீரோயின் இவர்களின் பெற்றோர் மற்றும் அவர்கள் காதலை அழகாக சொன்ன விதம்…

*லொக்கேஷன், இசை, ஒளிப்பதிவு, காஸ்ட்யூம்ஸ் என அனைத்தும் சிறப்பு…..

ரசனைமிகுந்த காட்சிகள்:

*சித்தார்த் ப்ளாஷ்பேக்கில் காதலை விவரிப்பது…..

*அமலாபாலிடம் போன் நம்பர் வாங்கும் காட்சி…

*நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி…

*அமலாபாலிடம் சித்தார்த் அப்பா துணிக்கடையில் பேசுவது…

*அமலாபாலின் அப்பா சுரேஷின் காதல் எபிசோட், குறிப்பாக மகளிடம் லவ் லெட்டர் கொடுத்தனுப்புவது, அதை அவர் மனைவி படித்து மகிழும் போது அவரின் எக்ஸ்பிரஷன் அழகு…

*சுரேஷ் காதலுக்கு "வளையோசை பாடலை பேக்ரவுண்ட்ல யூஸ் பண்ணுவது...

*லெட்டரை அம்மாகிட்ட கொடுத்துடும்மான்னு சுரேஷ் அமலாபால்கிட்ட கொடுத்துட்டுப் போகும் போது மரத்திலிருந்து பூ விழுவது போன்ற காட்சிகள் ஸோ க்யூட்…

*சித்தார்த் அமலாபால்கிட்ட லவ் சொல்லும் போது, "இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாளாச்சா" ன்னு அமலாபால் கேட்கும் இடம் சூப்பர்…

*இயக்குனர் தலை காட்டும் காட்சிகள்… வசனங்கள்.... அனைத்தும் சூப்பர்.!!!!
ரிசல்ட்:

*எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய நல்ல பொழுதுபோக்கான படம், குறிப்பாக காதலர்களும், சண்டைபோட்டு பிரிந்தவர்களும்….

*ஈகோவை விரட்டுனா லவ்ல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு சொல்லிருக்கார் இயக்குனர்….நல்ல மெசேஜ்…….

*சொதப்பாமல் படம் எடுப்பது எப்படின்னு பாலாஜிமோகன் நிரூபித்துவிட்டார்….
ஹேட்ஸ் ஆஃப் பாலாஜிமோகன்…

*குமுதம், ஆனந்தவிகடன் விமர்சனத்தை எல்லாம் படிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க,

*KSY-ன் நல்ல விமர்சனம் படிக்கணுமா?.

*செந்தில் சி.பி யோட அட்ராசக்க ப்ளாக் பக்கம் போங்க.. விமர்சனத்தை விலாவாரியா படிங்க…
*படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க… பண்ணுவீங்க…

*சினிமா சினிமா சினிமா*
adrasaka.blogspot.com

.
.
.

Sunday 5 February 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #2




11.  நாங்க படத்துக்கு போய் படம் பிடிக்கலேன்னா, கடுப்பாகி வெளில போயிடுவோம் ? நீங்க எப்புடி ? கடைசி வரைக்கும்  உக்கார்ந்து பார்த்துட்டு தான் வருவிங்களா ? நினைச்ச எங்களுக்கே கஷ்டமா இருக்கு , மறைக்காம சொல்லுங்க உங்க அனுபவத்தை ?

நான் எந்தப்படத்தையும் முழுசா பார்க்க மாட்டேன், செம போர்.. முக்காவாசிப்படம் தான் பார்ப்பேன் ஹி ஹி .. ஏன்னா பெரும்பாலான படங்கள் இடைவேளை வரை தான் நல்லாருக்கும்.. அதுவும் இல்லாம கட் அடிச்சுட்டு படம் பார்க்கறதால. எந்தப்படத்தையும் முழுசா பார்க்க முடியாது, ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தா கிளம்பிடுவேன்..



12. மொக்கை படத்துக்கு போய் பல்ப் வாங்குன அனுபவம் எதாவது ?

 ன்றா? இரண்டா? மொக்கைகள்.. என்னிடம் வந்து சேர்ந்தவை.. பல இருக்கு..



13. திவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?  -@sundaratamilan2

 ரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..



14. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?  by @NattAnu

 ல்ல, அதைப்பற்றி நான் சிந்திக்கலை..  நான் உள்ளே வந்தப்ப என் பிளாக் அலெக்ஸா ரேங்க் 18 லட்சம்.. அது 2 லட்சம் ஆக வர்ற வரைக்கும் அப்படி ஒரு நினைப்பு இல்ல. அதுக்குப்பிறகுதான் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.. இப்போ சவுக்கு தான் எனக்கு முன்னால இருக்கார்.. கேபிள்சங்கர், ஜாக்கி சேகர் எல்லாரையும் தாண்டிட்டேன்.. (இதை அடக்கத்துடன் சொல்லிக்கறேன்) தமிழ்மணம்ல 58 வாரங்கள் முதல் இடம் பிடிச்சேன், இண்ட்லில்  அதிக ஹிட்ஸ் பதிவுகள் போட்ட பதிவர்கள் லிஸ்ட்ல முதல் இடம், ஒவ்வொரு திரட்டிகளிலும் ஒரு தனி இடம் பிடிச்சிருக்கேன்..



15. நீங்க பொண்ணுங்க போடுற மென்ஷனுக்கு மட்டுந்தான் ரிப்ளை பண்ணுவீங்களா தல.?

 ஹா ஹா டெயிலி நான் ரிப்ளை போடற அய்யனார், அறிவுக்கரசு, ஷேக்,  உட்பட பலரும் ஆண்கள் தான்.. நான் 1700 ஆண்களை ஃபாலோ பன்றேன் , அது யார் கண்ணுக்கும் தெரியாது.. 130 பெண்களை ஃபாலோ பண்ணுனா அதுதான் முதல்ல தெரியும்.. அது மனித மன இயற்கை.



16. மீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள் கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?

ய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!



17. புதிய, வளரும் பதிவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன.?

ல்லாரும் நல்ல பதிவா போடுங்க.. என்னை மாதிரி லூஸ் தனமா , மொக்கை போஸ்ட் போடாதீங்க ஹி ஹி ... மற்ற பதிவர்கள் எந்த மாதிரி பதிவு போடறாங்கன்னு படிச்சுப்பாருங்க.. ஹாட் டாபிக் பற்றி போஸ்ட் போடுங்க.. அரசியல், சினிமா , நகைச்சுவை கலந்து இருக்கட்டும்.



18. ந்துல யாரு..எவ்ளோ கலாய்ச்சாலும் டென்ஷனே ஆக மாட்றீங்களே.. எப்படி இந்த மனோநிலை.?

து பிளாக்ல எல்லாரும் என்னை தாக்கி, கலாய்ச்சு போஸ்ட் போட்டு எனக்கு பழக்கமாகிடுச்சு..  அதுவும் இல்லாம உப்பு கம்மியாதான் சாப்பாட்ல சேர்த்துக்குவேன் அதான்..  ( எனக்கு இயல்பாவே ரோஷம் கம்மி ஹி ஹி )



19.  ல்லா படத்தையும் பாத்துட்டு விமர்சனம் பண்றீங்களே.உங்க வீட்டம்மா திட்ட மாட்டாங்களா.. தோராயமா சினிமாவுக்கு மட்டும் உங்க மாச பட்ஜெட் எவ்ளோ. ?   by @g4gunaa

ன் சம்சாரம் ரொம்ப நல்ல பொண்ணு, திட்ட மாட்டாங்க, வாரம் ஒரு தடவை உதைப்பாங்க ஹி ஹி....!!! வாரம் சராசரியா 3 படம் = 200 ரூபா மாசம் 12 படம்= 800 டூ 1000 ரூபா.!!!



20. சங்க மென்ஷன் போட்டா மட்டும் ரிப்ளே பண்ண ரொம்ப நேரமெடுக்குறீங்களே!அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேக்குறோம்? by @rAguC

டங்கொய்யால, மென்ஷன் பார்க்கவே இப்போதான்யா கத்துக்கிட்டேன், இனி பாருங்க பின்னிடறேன்.!!!



21. ப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங் க்லாஸ்தான் காரணமா?                   by @sesenthilkumar

மா, அதுவும் இல்லாம நான் கம்மங்கூழ், ராகிக்கூழ், சாப்பிட்டு உடம்பையும் மனசையும் கூலா வெச்சிருப்பேன் அதுவும்தான்.!!! ( வெளீல தனியா வாடி, உன்னை கவனிச்சுக்கறேன்... கலாய்க்கறியா ங்க்கொய்யால )



22.   1000 பதிவுகளில் எதற்க்கேணும் -ve பின்னூட்டம் வந்துள்ளதா? ஆமெனில், அதை எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்? by @Thanda_soru

 துக்கு வர்லைன்னு கேளூங்க, நாம எந்த பதிவு போட்டாலும் அதுக்கு ஆப்போசிட்டா பேச ஒரு குரூப் ரெடியா இருக்கும், ஆனா விஜய்யை கலாய்ச்சு போஸ்ட் போட்டா மட்டும் ரெகுலரா 15 பேர் வந்து திட்டிட்டு போவாங்க, அவங்க இப்போ ரெகுலர் திட்டிங்க் கச்டமர்ஸ் ஆகிட்டாங்க ஹி ஹி அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும்.. ஜாலி கலாய்ப்பை ரசிக்கற மனோ பக்குப்வம் அவங்களூக்கு கம்மின்னு நினைச்சுக்குவேன்.



 23. நீங்க படுச்சது கணக்கா இல்ல கணக்கு பண்றதா ?  by @Butter_cutter

ண்ணே, உங்க அளவுக்கு நான் கணக்கு பண்ண முடியாதண்ணே.. அன்னைக்கு ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்தப்போ ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்தீங்க, என்னை பார்த்ததும் நைஸா அவங்களை ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல் பக்கம் நிக்க வெச்சுட்டு என்னை நைஸா கழட்டி விட்டுட்டு மறுபடி பார்ட்டியை பிக்கப் பண்ணிட்டு போனீங்களே, அதை நான் பார்த்துட்டேன்.. ஹி ஹி.!!!



 24. சினிமா வசனங்களை எப்படி ஒன்று விடாமல் எழுதுகிறீர்கள் ?  ரெக்கார்டும் பண்ணலை ?  அப்புறம் எப்புடின்னு சொல்லுங்க சார் ?   by @gundubulb

 ல்லாம் பழக்க தோஷம் தான்... செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ஆரம்பத்துல 10 ஜோக்ஸ் அல்லது வசனம் நினைவு வரும், போகப்போக டெவலப் ஆகிடும்..



25. நீங்க வெற்றி பெற முக்கியமான மூன்று நல்ல குணம் எவை?

 
1. தையும் லைட்டா எடுத்துக்கற சுபாவம்.
2. கோ பார்க்காமல் எல்லோரிடமும் பழகுவது.
3. டுமையான உழைப்பு, எந்நேரமும் படைப்பு, ட்வீட்ஸ், போஸ்ட் என சிந்திப்பது..
.
.
.

தொடரும்...

Thursday 26 January 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #1


பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் ! (மொக்கை போடுவதிலும் சாதனை ) வெளியிட்டு சாதனை படைத்த மொக்கை பதிவர் செந்தில்.சிபி உடன் நமது ட்விட்டர் நண்பர்கள் போட்ட மொக்கைகள் , மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் என்ற பதிவாக (மொக்கையாக) வெளியிடுகிறோம். மொக்கை கேள்விகள் கேட்ட நண்பர்களுக்கு அசராமல் தன் மொக்கை நடையில் பதிலளித்த சிபி க்கு நன்றிகள்....மொக்கையின் முதல் பாகம் இதோ !                                                                                                                                                    1.சி பி என்பதன் விளக்கம் ?

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி ( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C இனிஷியல்ல சேர்த்துட்டேன் .. ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )





. 2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்?

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம்





3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்..





4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?


பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில் 17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களூக்கும் எழுதி உள்ளேன்



5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?



களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.. ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்..



6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?



சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்..



7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?



எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி, மகள் என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்



8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?



நான் கவுண்டமணி ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே பிலாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றா மொக்கை என திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ்



9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?



வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..



10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?


நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள்

நன்றி ! ! !                                                                                                                           
அனைத்து ட்விட்டர் நண்பர்கள்.....                                                                              
 அட்ராசக்க வலைத்தளம்                                                                       
                                                                                                                                       தொடரும்....
                     
                                                                                                                     

Saturday 14 January 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்- விமர்சனம்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
தமிழ் சினிமாவில் ரஜினிக்குப் பிறகு மிகப்பெரிய சக்தியாக கருதப்படும் விஜய், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெளிவந்துள்ள முதல் படம்.
தமிழின் முதல் மல்டிஸ்டாரர் படம், முண்ணனி தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றிய படம் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது நண்பன்....
மனதுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யும் பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய், பயந்தாங்கொள்ளி சேவற்கொடி செந்திலாக ஜீவா, போட்டோக்ராபியை விரும்பும் வெங்கட்ராம கிருஷ்ணனாக ஸ்ரீகாந்த், சைலன்சர் ஸ்ரீவத்சனாக சத்யன், காலேஜ் ப்ரின்சிபால் விருமாண்டி சந்தனமாக சத்யராஜ் (செல்லமாக வைரஸ்) என கதாபாத்திரத் தேர்வு கச்சிதம்....
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள், சத்யராஜ் நடத்தும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார்கள், கல்வியியல் நடைமுறைகளை விஜய் சற்று அதிகமாகவே விமர்சிக்கிறார், முதல் சந்திப்பிலேயே இவருக்கும் சத்யராஜ்க்கும் முட்டிக்கொள்கிறது..
இவர்கள் 3 பேரும் இணைந்து அடிக்கும் லூட்டிகளும், அரட்டைகளுமே நண்பன்...சத்யனையும், சத்யராஜையும் இவர்கள் படுத்தும் பாடு அப்பாடா...
இடையில் இலியானாவுடன் காதல் டூயட் என ரவுண்ட் கட்டி அடிக்கிறார் விஜய்....
காலேஜ் முடிந்ததும் விஜய் காணாமல் போகிறார், காணாமல் போன நண்பனை மற்ற இரண்டு நண்பர்கள் தேடிப் பிடிப்பதே நண்பன் படத்தின் கதை....
அறிமுகமாகும் சீனில் தொடங்கி இறுதி வரை சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் விஜய்.
சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் .என அனைவரின் நடிப்பும் அசத்தல்.
சத்யனின் ஸ்டேஜ் காமெடி இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக இருக்கும்....மிகச்சிறப்பான நடிப்பு
ஹாரிஸ் இசையில் அஸ்கு லஸ்கா, என் பிரண்டைப் போல யாரு மச்சான், எந்தன் கண்முன்னே, இருக்கானா, ஹார்ட்டிலே பேட்டரி என அனைத்தும் ஆல் இஸ் வெல்...
பாடல்களை படம் பிடித்த விதத்தில் ஈர்க்கின்றனர் இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும்....
ஷங்கர், கார்க்கியின் வசனங்களும் , ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவும், பராகான்,ஷோபியின் நடனஅமைப்பு என அனைத்திலும்  அனைவரையும் கவர்கிறான் நண்பன்.....
வெற்றிக்குப் பின்னாடி போகாதே ! உனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, கஷ்டப்பட்டு உழை, வெற்றி தானா தேடி வரும்....இந்த வசனம் " நண்பன்" படத்திற்கும் சாத்தியமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல....
அமைதியான நடிப்பு, அருமையான நடனம், குறும்புத்தனம் என கலந்து கட்டி அடிக்கிறார் இளைய தளபதி...
சுருக்கமா சொல்லணும்னா "தலைவா யூ ஆர் கிரேட்" தான்...
மொத்தத்தில் நண்பன் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய ஆல் இஸ் வெல் சினிமா.
இந்த இனிய நாளில் அனைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நண்பன் பொங்கல்- ஆல் இஸ் வெல் பொங்கல்.......


Wednesday 4 January 2012

மன அழுத்தத்தை போக்கும் சில வழிமுறைகள்

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் எனவே மன அழுத்தத்தில் இருந்து வாழ்க்கையை பாதுகாக்க சில வழிமுறைகள் ….

தேவையற்ற விவாதம் வேண்டாம்

மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது.

மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி துணையை அச்சுறுத்தக்கூடாது.

தனிமையை நாடுங்கள்

மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்கள் துணைக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள்

உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி

கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள்

எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.