Saturday 12 March 2016

பிச்சைக்காரன் விமர்சனம்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான்  எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்கள், மற்றும் தலைப்புகளால் மக்களின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்,

சொல்லாமலே, டிஷ்யூம், பூ, 555, படங்களின்  தனித்துவமிக்க இயக்குனர் சசியும் இணைந்திருக்கும் படமே பிச்சைக்காரன்...

எவருமே வைக்க விரும்பாத தலைப்பை வைத்த விதத்திலேயே இந்த டீம் மக்கள் கவனத்தை ஈர்த்து விட்டது.

கதை:

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயைக்காப்பாற்ற 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக மாறும் கோடீஸ்வரன் சந்திக்கும் இடர்ப்பாடுகள்.

ப்ளஸ்:

விஜய்ஆன்ட்டனி கோடீஸ்வரனாகவும், பிச்சைக்காரனாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகி சாட்னா டைட்டஸ் தான் காதலிப்பவர் பிச்சைக்காரன் என தெரிந்தும் அவரை வெறுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு.

அம்மாவாக நடித்திருப்பவர் இயல்பான நடிப்பால் மனதைக்கவர்கிறார்.

ப்ளஸ்:

விஜய்ஆன்ட்டனி நடிப்பு+ இசை.

சசியின் வசனங்கள்.

பிச்சைக்காரனிடம் அடிவாங்கும் ரவுடி குரூப் காமெடி.

பிச்சைக்காரனுக்கு கேர்ள் ப்ரண்ட் இருப்பதைப் பார்த்து வெறுப்பாகும் ட்ராபிக் கான்ஸ்டபிள் காமெடி.

பாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவும் அருமை.

வசனங்கள்:

* ஏங்குறவன் கை எப்பவுமே ஓங்காது.

* பிச்சைக்காரன் தொட்ட போது அவனை அடித்த இன்ஸ்பெக்டர் அவனே கோடீஸ்வரன் என தெரிந்து மன்னிப்பு கேட்கும் இடத்தில்...
விஜய்ஆன்ட்டனி பேசும் வசனம்...

நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்துருக்கேன் அப்போதெல்லாம் வருத்தப்படலை, ஆனா நான் பணக்காரன் தெரிஞ்சதும் என்னைத் தொடுற இந்த நேரம் பணக்காரனா இருக்க வெட்கப்படுறேன்...
சூப்பர் வசனம்...

இயக்குனர் மூர்த்தி வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாயை ஒழிக்கனும்னு ஐடியா கொடுக்கும் வசனம் அருமை...

மொத்தத்தில் பிச்சைக்காரன் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற யதார்த்தமான படம்...

பிச்சைக்காரன் என்ற இந்த படத்தின் வெற்றியால் தொடர்ச்சியாக 4 படங்கள் வெற்றி அடைந்ததோடு, கோடீஸ்வரனாகவும் மாறிவிட்டார் விஜய்ஆன்ட்டனி....

#தட்சிணா...

Sunday 9 August 2015

தேசிய கைத்தறி தினம்

சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு.

கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது.

நெசவுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்    சந்த் கபீர் விருதுகள் பலருக்கு பிரதமர் மோடி அவர்களால் வழங்கப்பட்டது...

Saturday 8 August 2015

இராமானுஜன் விருது 2015

இராமானுஜன் விருது 2005ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த விருது கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு, புகழ்பெற்ற கணிதமேதை இராமானுஜன் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

45 வயதுக்கு உட்பட்டவருக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது.

இத்தாலியைச் சார்ந்த நிறுவனமான ICTP, இந்தியாவைச் சார்ந்த DST, பன்னாட்டு அமைப்பான IMU, ஆகிய மூன்றும் சேர்ந்து இந்த விருதை வழங்குகின்றன.

2015 இராமானுஜன் விருது:
இந்தியரான அமலந்து கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப்பெறும் இரண்டாவது இந்தியர் கிருஷ்ணா.

முதல் இந்தியர்: சுஜாதா ராமதுரை
2006 ல் வென்றார்.

மொத்த பரிசுத்தொகை 15,000 அமெரிக்க டாலர்கள்.

மேலும் சில தகவல்கள்:

ICTP- INTERNATIONAL CENTRE FOR THEORETICAL PHYSICS, ITALY.

DST- DEPARTMENT OF SCIENCE & TECHNOLOGY. INDIA.

IMU- INTERNATIONAL MATHEMATICS UNION.

Sunday 18 January 2015

ஐ - மெகாஹிட்- அதுக்கும் மேல

ஐ னா அழகு, தலைவன் னு எல்லாரும் அர்த்தம் கண்டுபிடிக்க,
பழிவாங்கல் கதையை தனக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் விக்ரமுடன் இணைந்து பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் ஷங்கர்.

கதை:

பாடி பில்டர் விக்ரம் மிஸ்டர் இந்தியாவாக ஆசைப்படுகிறார், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொள்கிறார். விக்ரமிடம் போட்டியில் தோற்றவர் முதல் எதிரி.

விளம்பர மாடல் எமி மீது விக்ரமுக்கு அவ்வளோ ஆசை, அவர் போட்டோவை எல்லாம் சேர்த்து வச்சிருக்கார். எமி நடிக்கிற விளம்பர பொருளையெல்லாம் வாங்கி வச்சிருக்கார்.

வில்லன் உபேன் படேல் எமி கூட நடிக்கிற மாடலா வர்றார், அவருக்கு எமி மேல ஒரு கண்ணு, ஆனா எமிக்கு அவரை பிடிக்கலை, கடுப்பான எமி யை கழற்றிவிட்டு எமியோட விளம்பர லைப் காலி பண்றாரு.

எமி விக்ரமை கூட சேர்த்துகிட்டு சீனா ல விளம்பரத்துல நடிக்கப் போகுது, நடிப்பு வராத விக்ரம்க்கு (ஸாரி விக்ரம்) நடிப்பு வரணும்னு லவ் பண்றதா பொய் சொல்லுது பாப்பா, அப்புறம் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது. ரீல் லவ் ரியல் லவ்வா மாறுது.

இதுக்கு நடுவுல மேக்கப்மேன் திருநங்கைக்கு விக்ரம் மேல காதல். பூச்சிக்கொல்லி குளிர்பான விளம்பரத்துல நடிக்காததால விக்ரம் மேல விளம்பர கம்பெனி முதலாளிக்கு கோபம்.

எமி ய காதலிக்கிற டாக்டர் சுரேஷ்கோபிக்கு விக்ரம் மேல கோபம். வில்லன்கள் எல்லாரும் சேர்ந்து ஊசி போட்டு விக்ரம் உருவத்தை அகோரமா மாத்திடுறாங்க, விக்ரம் 'அவங்களை எப்படி பழி வாங்குறாரு  இதான் "ஐ"

பலம்:

* விக்ரமின் கடின உழைப்பு, நடிப்பில் ஒவ்வொரு சீனிலும் தெரிகிறது.
நடிக்கத் தெரியாம நடிக்கிற சீன்ல கூட விக்ரம் சூப்பர்
கூனன், பாடி பில்டர், எல்லாமே பக்கா.

ஒளிஓவியம்:

பி.சி. ஸ்ரீராம் கேமரா படத்தின் பெரிய பலம், எல்லா காட்சிகளுமே அழகு.
சீனா காட்சிகளும் பாடல்களும் கண்களுக்கு விருந்து.

டெக்னாலஜி:

கிராபிக்ஸ் எல்லாமே சூப்பர். மெர்சலாயிட்டேன் பாடல் எல்லோரையும் மெர்சலாக்கும்.

இசை:

பிண்ணனி இசை படத்தின் பலம், பாடல்கள் வீடியோவுடன் பார்த்து ரசிக்கலாம்.

காமெடி:

பவர் ஸ்டார், சந்தானம் ஜிம் காமெடி, எந்திரன் 2 பவர் காமெடி பக்கா. சந்தானம் குணச்சித்திர நடிகராகிட்டாரு.

வசனம்:

என்னைக் கொல்லப் போறியா?
அதுக்கும் மேல..

சும்மா தண்ணி காட்டுனேன்

கமல் பேன்ஸ் ரத்தம் குடுக்குறாங்க, விஜய் பேன்ஸ் அரிசி குடுக்குறாங்க, நீ மேடத்துக்காக முடிய குடுக்க மாட்டியா.

ஜான் யூ ஆர் கான்..

சண்டைக்காட்சிகள் எல்லாமே அருமைதான், ஆனால் கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.

மொத்தத்தில் "ஐ" விக்ரம், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் காம்பினேஷனில் ஆஸ்கார் பிலிம்ஸ் படைத்திருக்கும் பொங்கல் விருந்து.

"உண்மை, உழைப்பு, உயர்வு"
இதில் உழைப்புக்குப் பதிலா விக்ரம்&ஷங்கர் டீம் பேரை சப்ஸ்டியூட் பண்ணிக்கலாம்.

வீணா போனவனுங்க எத்தனை மார்க் போட்டா என்ன? விளங்காதவனுங்க என்ன ரேட்டிங் குடுத்தா என்ன?

தியேட்டர்ல போய் பாருங்க.
உள்ளூர் தியேட்டரில் உலக சினிமா "ஐ"

மெய்யாலுமே மெர்சலாகிடுவீங்க..

Friday 16 January 2015

டார்லிங்- டக்கரு விமர்சனம்

பேய் சினிமா ட்ரண்டில் இன்னொரு படம், த்ரில்லிங், காமெடி, எமோஷன்ஸ், யதார்த்தமாக கலந்த கலவை
"டார்லிங்"

கதை:

தற்கொலை செய்ய முடிவெடுத்து பண்ணை வீட்டுக்கு வரும் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ரானி, பாலா, கருணாஸ், ஆகியோர் சந்திக்கும் பிரச்சினைகள் பேய், த்ரில்லர், காதல், இதுதான் டார்லிங்....

ஏற்கனவே பண்ணை வீட்டில் தங்கிட வந்த ஜோடி கொல்லப்படுகின்றனர், அந்த பெண்ணின் ஆவி கதாநாயகி உடலில் புகுந்து கொண்டு படுத்தும்பாடு தான் படம்

திரைக்கதை தான் படத்தின் பெரும்பலம். காமெடி + த்ரில்லர் மசாலா கலந்து வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆன்டன்.

பலம்:

* ஜி.வி.பிரகாஷ்குமாரின் யதார்த்த நடிப்பு.

ஹீரோயினை தொட்டாலே பேய் வரும்னு தெரியும் போதும், அது தெரிஞ்சே தொட்டு பேயை வரவைக்கும் போதும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பிரகாசிக்கிறார்.

* நிக்கி கல்ரானி:

பச்சமண்ணுடா இவனு ஒருத்தர் மாத்தி ஒருத்தரா சொல்லி, கடைசில பேயா மாறும்போதும் அடிக்கும் போதும் பட்டைய கிளப்புது பொண்ணு.

* கருணாஸ்:

செம ரீ என்ட்ரி  கருணாஸ்.
பாலா கூட சேர்ந்து அடிக்கிற காமெடி லூட்டி.
சூப்பர் கருணாஸ்...

பாலா:

பண்ணையாரும் பத்மினியும் படத்துல பீடையா நடிச்ச பாலா டார்லிங் படத்தோட பெரிய ப்ளஸ்.
பச்சைமண்ணுடா இவனு சொல்லும் போது தியேட்டர்ல சத்தம் தெறிக்குது.

மொட்டை ராஜேந்திரன்:

டெக்னாலஜி மந்திரவாதி, பேய் கூட ஸ்கைப் வீடியோ சாட், ஐயம் வெய்ட்டிங் துப்பாக்கி டயலாக்னு மொட்டை பட்டைய கெளப்புது.

வசனங்கள்:

சாம் ஆன்டன் தன்னுடைய திரைக்கதை மற்றும் காமெடி வசனங்கள் மூலம் கலக்கிட்டார்.

# சாவுக்கு எதுக்குடா ஷாப்பிங்

#பச்ச மண்ணுடா அவ.

#என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..
(சொல்வதெல்லாம் உண்மை டயலாக்)

#நாங்க பன்னிங்க தான், நீங்க உள்ளே என்ன பண்ணீங்க.

#கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கப்போறேன்.
(லிங்குசாமி)

சமீப நிகழ்வுகள் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.

பவர்ஸ்டாரை கூட விட்டுவைக்கலை.

படத்தின் ஒரே நெருடல் சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் தான், நல்லாவே இருந்தாலும் பாடல்கள் வேகத்தடை.

மொத்தத்தில் டார்லிங் பொங்கலுக்கு செம ட்ரீட்டு...

சங்கர் படம் செம லெங்த்தா இருக்கு, சுந்தர்.சி படம் சுமாரா இருக்குனு பீல் பண்ணாம டார்லிங் பாருங்க டக்கரா இருக்கு...

என்ஜாய் பண்ண ஏற்ற எண்டர்டெய்னர்.
பேய் ஹிட்...

Friday 19 December 2014

சாகித்ய அகாடமி

இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருது
ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது.

இந்த ஆண்டுக்கான சாகித்யஅகாடமி இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் சிறந்த படைப்பாக பூமணி எழுதிய "அஞ்ஞாடி" எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமணி அவர்களை வாழ்த்துவோம்.

Sunday 8 April 2012

மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #4



36. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


ல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..


37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?


மிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ்வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது வேலைக்கு போறதுதான்  நல்லது.


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால்
பகிருங்களேன் ?    by @iyyanars

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனதுதான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..
ந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பிவிட்டார்..
அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது
1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது,
2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது.


39. .உங்கள் இளமையின் ரகசியம் ?

னக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... (கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க)
தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் ) வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன். சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை..
இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10, மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by @arivukkarasu

ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹிஹி

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி, புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்..


42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?

நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு பண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக விமர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்..

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்.

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்..

45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா? by @NattAnu

ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான்...!!!!!
.
.
.


(பதிவரின் பேட்டி இத்துடன் முடிகிறது.
அடுத்தொரு பதிவருடன் மறுபடி சந்திப்போம்.!!!)

.
.
.